Friday, May 30, 2014

சரியா? தவறா?

சரியா? தவறா?

 Author: N.Rajmohan (S.Gopal) 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI128

To Buy - http://www.myangadi.com/sariya-thavara-vikatan-publications

இது பெற்றோர்களுக்கான நூல்! அதாவது, எட்டு வயது முதல் பதினெட்டு வயது வரை உள்ள இளம் வளர் பருவம் மற்றும் வளர் பருவத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு! இப்படித்தான் குழந்தை வளரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதேசமயம், குழந்தையின் மனமும் கோணாமல், நம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குலைத்துக்கொள்ளாமல் இந்தப் பருவத்தினரை வளர்க்கவேண்டும். குழந்தையை வளர்த்த விதத்தை பிறர் மெச்சும்படி இல்லா விட்டாலும், குறைந்த பட்சம் பழி சொல்லாமலாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதோடு, தற்காலக் கல்வி, டீன் ஏஜ் வயதினரின் நடத்தை, அவர்களைச் சூழ்ந்துள்ள அபாயம் ஆகிய அனைத்துக்கும் ஈடுகொடுத்து அவர்களை வளர்ப்பது... சவாலான விஷயம்தான்! மேலே குறிப்பிட்டுள்ள குழந்தைகளை வளர்க்கும் யோசனைகளையும், அவற்றை நிறைவேற்றும் அத்தனை செயல் நுட்பங்களையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் என்.ராஜ் மோகன். ஆங்காங்கே ‘கேஸ் ஸ்டடி’யும் இருப்பதால், அவர் சொல்ல வந்த கருத்தும் படிப்பவர்களின் மனதில் ஆணித்தரமாகப் பதிகிறது. குழந்தை வளர்ப்பில், சில அபாய கட்டங்கள் பொதிந்திருப்பதையும், காலம் கடந்தே அது தெரியவரும் என்பதையும் இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment