Saturday, June 15, 2013

Kuzhandhaigal Psychology - குழந்தைகள் சைக்காலஜி

Kuzhandhaigal Psychology. Rs.110.  Buy Kuzhandhaigal Psychology Book, Author - G.S.S.. All India Free Home Delivery.
Description
குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? 
திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? 
அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? 
பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? 
என்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று. 

Karu Mudhal Kuzhandhai Varai - கரு முதல் குழந்தை வரை

Karu Mudhal Kuzhandhai Varai. Rs.165.  Buy Karu Mudhal Kuzhandhai Varai Book, Author - Dr.Jayarani Kamaraj. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.comhttp://www.myangadi.com/karu-mudhal-kuzhandhai-varai-nalam-publications

Description

கருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?
கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?
கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?
கர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?
கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? 
பிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?
கருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
நூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். 

Ellorukkum Kuzhandhai Saathiyam - எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்

Ellorukkum Kuzhandhai Saathiyam. Rs.170.  Buy Ellorukkum Kuzhandhai Saathiyam Book, Author - Dr.Aniruddha Malpani / Dr.Anjali Malpani. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/ellorukkum-kuzhandhai-saathiyam-nalam-publications

Description

பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது?

குழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்?

ஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

குழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது?

குழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Ungal Kuzhandhai - உங்கள் குழந்தை

Ungal Kuzhandhai. Rs.215.  Buy Ungal Kuzhandhai Book, Author - Dr.R.K.Aanand (Ravigopal). All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/ungal-kuzhandhai-vikatan-publications

Description

திருமணமான பெண்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான இரண்டு கட்டங்கள் உண்டு. முதலில், கருவில் குழந்தை வளரும் பிரசவ காலம். அடுத்து, குழந்தை பிறந்த பிறகு, அதைத் தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பரவச அனுபவம். மும்பையில் பிரபல குழந்தை நல மருத்துவராகத் திகழும் டாக்டர் ஆர்.கே.ஆனந்த் எழுதியிருக்கும் இந்த நூல், மேலே குறிப்பிட்ட இரண்டாவது கட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. பிரசவத்துக்காக மருத்துவமனைக்குப் புறப்படும்போது என்னவெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விவரிப்பதற்கு முன்னால், குழந்தைக்குத் திட்டமிடுவது குறித்தும், கருவுற்றிருக்கும் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் டாக்டர் ஆனந்த். மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலும் பிறந்த குழந்தையைப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு நூலாசிரியர் கொடுத்திருக்கும் டிப்ஸ், தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது குறித்து இந்த நூலில் காணப்படும் விளக்கங்கள், தாய்மார்களுக்கு சிறந்த பாடநூலாக இருந்து உதவும். 

Yavana Rani - ‘யவன ராணி’

Yavana Rani Pagam 1, 2. Rs.400.  Buy Yavana Rani Pagam 1, 2 Book, Author - Saandilyan. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/yavana-rani-pagam-1-2-vanathi-pathipagam

Description

சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.

ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராடுகிறான். டைபீரியஸ் படைத்தலைவனுக்கு மயக்கத் துளிகளைக் கொடுத்து யவனர் கப்பல் ஒன்றில் அனுப்பிவிடுகிறான். கப்பல் பயணத்தில் இளஞ்செழியன் பல வாறான இன்னல்களுக்கு ஆளாகினாலும், அத்தனையும் வெற்றிக்கொண்டு தாயகத்திற்குத் திரும்புகிறான். ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி படைத்தலைவன் மேல் காதல் கொண்டு அவனுக்கு பல வழிகளில் உதவி புரிகிறாள். ஏற்கனவே பூவழகியிடம் இதயத்தைப் பறிக்கொடுத்த இளஞ்செழியன் யவன ராணியின் அழகில் தடுமாறவே செய்கிறாள். இறுதியாக, இளஞ்செழியன் வகுத்த போர் திட்டத்தால் கரிகாலன் வெற்றியுடன் அரியணையில் அமருகிறான். யவண ராணி டைபீரியஸால் கொல்லப்படுகிறாள். இளஞ்செழியன் பூவழகியை மணந்து இன்பமாக வாழ்கிறான்.

இந்நாவலில் அக்காலத்து தமிழர்களின் செல்வமும், வீரமும், திறமையும், தந்திரங்களும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், நாவலைப் படித்து முடித்தப் பிறகு யவன ராணியின் காதலும் தியாகமுமே மனதில் மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி தமிழனான இளஞ்செழியன் மீது மையல் கொள்கிறாள். படைத்தலைவன் மீது அவள் கொண்ட காதல், சொந்த நாட்டையும் கடமையையும் மறக்கச் செய்கிறது. யவன ராணி தனது இலட்சியத்தை விட தான் மனதால் வரித்திருக்கும் படைத்தலைவனின் இலட்சியத்தை நிறைவேற்ற அரும் பாடுபடுகிறாள். இதனால் ராணியாக இருந்தும் டைபீரியஸால் அரண்மனையிலேயே சிறை வைக்கப்படுகிறாள். பல சோதனைகளைச் சந்தித்த போதும் ராணியின் காதல் சிறிதும் உறுதி குலையவில்லை. படைத்தலைவனின் மனதில் பூவழகி இருப்பதை அறிந்திருந்தும் அவள் அவனை விரும்புவதை நிறுத்தவில்லை. தன் காதலின் மீது அவளுக்கிருந்த உறுதி வியப்பளிக்கிறது. உயிருக்கே அபாயம் விளையும் தருணத்தில் கூட அவள் படைத்தலைவனுக்கு உதவுதை பேருவகையாக, மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையாகக் கருதுகிறாள். இறுதியாக கடமையை மறந்து தேச துரோகம் செய்தமைக்காக டைபீரிஸால் கொல்லப்படுகிறாள். அவள் இறுதி மூச்சி படைத்தலைவனின் அணைப்பில் நிற்கிறது. யவன ராணியின் காதலும் தியாகமும் மகத்தானது. அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

சாண்டில்யன் இந்நாவலுக்கு மற்ற பெயர்களை விடுத்து ‘யவன ராணி’ என்று பெயர் வைத்தமைக்கு அர்த்தம் இருக்கவே செய்கிறது. யவன ராணியின் தியாகம் படைத்தலைவன் திறமையையும், கரிகாலன் வீரத்தையும், பூவழகியின் அழகையும் மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. ராணியின் காதல் அவளைப் போலவே அழகானது. தான் காதலித்தவன் தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை என்பதை அறிந்தும் அவள் அவனை வெறுக்கவோ அவன் மீது கோபப்படவோ இல்லை. மாறாக, அவனுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து உறுதுணையாக இருக்கிறாள். யவன ராணியின் காதல் மரணத்தையும் மிஞ்சி நிற்கின்றது. சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.

ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராடுகிறான். டைபீரியஸ் படைத்தலைவனுக்கு மயக்கத் துளிகளைக் கொடுத்து யவனர் கப்பல் ஒன்றில் அனுப்பிவிடுகிறான். கப்பல் பயணத்தில் இளஞ்செழியன் பல வாறான இன்னல்களுக்கு ஆளாகினாலும், அத்தனையும் வெற்றிக்கொண்டு தாயகத்திற்குத் திரும்புகிறான். ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி படைத்தலைவன் மேல் காதல் கொண்டு அவனுக்கு பல வழிகளில் உதவி புரிகிறாள். ஏற்கனவே பூவழகியிடம் இதயத்தைப் பறிக்கொடுத்த இளஞ்செழியன் யவன ராணியின் அழகில் தடுமாறவே செய்கிறாள். இறுதியாக, இளஞ்செழியன் வகுத்த போர் திட்டத்தால் கரிகாலன் வெற்றியுடன் அரியணையில் அமருகிறான். யவண ராணி டைபீரியஸால் கொல்லப்படுகிறாள். இளஞ்செழியன் பூவழகியை மணந்து இன்பமாக வாழ்கிறான்.

இந்நாவலில் அக்காலத்து தமிழர்களின் செல்வமும், வீரமும், திறமையும், தந்திரங்களும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், நாவலைப் படித்து முடித்தப் பிறகு யவன ராணியின் காதலும் தியாகமுமே மனதில் மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி தமிழனான இளஞ்செழியன் மீது மையல் கொள்கிறாள். படைத்தலைவன் மீது அவள் கொண்ட காதல், சொந்த நாட்டையும் கடமையையும் மறக்கச் செய்கிறது. யவன ராணி தனது இலட்சியத்தை விட தான் மனதால் வரித்திருக்கும் படைத்தலைவனின் இலட்சியத்தை நிறைவேற்ற அரும் பாடுபடுகிறாள். இதனால் ராணியாக இருந்தும் டைபீரியஸால் அரண்மனையிலேயே சிறை வைக்கப்படுகிறாள். பல சோதனைகளைச் சந்தித்த போதும் ராணியின் காதல் சிறிதும் உறுதி குலையவில்லை. படைத்தலைவனின் மனதில் பூவழகி இருப்பதை அறிந்திருந்தும் அவள் அவனை விரும்புவதை நிறுத்தவில்லை. தன் காதலின் மீது அவளுக்கிருந்த உறுதி வியப்பளிக்கிறது. உயிருக்கே அபாயம் விளையும் தருணத்தில் கூட அவள் படைத்தலைவனுக்கு உதவுதை பேருவகையாக, மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையாகக் கருதுகிறாள். இறுதியாக கடமையை மறந்து தேச துரோகம் செய்தமைக்காக டைபீரிஸால் கொல்லப்படுகிறாள். அவள் இறுதி மூச்சி படைத்தலைவனின் அணைப்பில் நிற்கிறது. யவன ராணியின் காதலும் தியாகமும் மகத்தானது. அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

சாண்டில்யன் இந்நாவலுக்கு மற்ற பெயர்களை விடுத்து ‘யவன ராணி’ என்று பெயர் வைத்தமைக்கு அர்த்தம் இருக்கவே செய்கிறது. யவன ராணியின் தியாகம் படைத்தலைவன் திறமையையும், கரிகாலன் வீரத்தையும், பூவழகியின் அழகையும் மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. ராணியின் காதல் அவளைப் போலவே அழகானது. தான் காதலித்தவன் தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை என்பதை அறிந்தும் அவள் அவனை வெறுக்கவோ அவன் மீது கோபப்படவோ இல்லை. மாறாக, அவனுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து உறுதுணையாக இருக்கிறாள். யவன ராணியின் காதல் மரணத்தையும் மிஞ்சி நிற்கின்றது. யவன ராணியின் காதல் தியாகத்திற்கு நாவலில் காணப்படும் எவரும், எதுவும் இணையாகாது!

Sivakamiyin Sabatham - சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sapatham. Rs.300.  Buy Sivakamiyin Sapatham Book, Author - Kalki. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/sivakamiyin-sapatham-vanathi-pathipagam

Book Description

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம், சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள் என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள் என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

மகேந்திர வர்ம பல்லவர், அவர் புதல்வர் நரசிம்ம வர்ம பல்லவர் எனும் மாமல்லர் அவர்களுக்கு முந்தைய தலைமுறையால் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மல்லை எனும் மாமல்லபுரத்தின் பின்னணியோடு நான்கு தலைமுறையினரை ஒட்டி பின்னிப் பிணையப்பட்ட அற்புதமான சரித்திர நவீனம் 'சிவகாமியின் சபதம்'.

Ponniyin Selvan 5 Parts - Vikatan Publications - பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் - விகடன்

Ponniyin Selvan (5 Parts). Rs.1350.  Buy Ponniyin Selvan (5 Parts) Book, Author - Kalki. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/ponniyin-selvan-vikatan-publications

Book Description

பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஊர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.

சரித்திரத்தையும், கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான 'பொன்னியின் செல்வன்', தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு - அருகில் இருந்தே பார்த்தது போல் நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல!

சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்சினைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று.

ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளி கூட விட்டுக் கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம் அவர்கள். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவர்களின் புதல்வர் - ஓவியர் ம.செ!

நெகிழ்ச்சியின் உச்சத்தில் இந்த பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தொகுப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார் அமரர் கல்கி அவர்களின் புதல்வர் 'கல்கி' கி.ராஜேந்திரன் அவர்கள்.

பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்.

அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன்... ஓவியர் அமரர் மணியம் தீட்டிய வண்ண ஓவியங்களுடன்... விகடன் வெளியீட்டில் இருந்து உங்களுக்காக!!!

Kadal Pura Book by Sandilyan - கடல் புறா

Kadal Pura Pagam 1 to 3. Rs.545.  Buy Kadal Pura Pagam 1 to 3 Book, Author - Saandilyan. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.comhttp://www.myangadi.com/kadal-pura-pagam-1-to-3-vanathi-pathipagam

Book Description

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது, அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து , அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை , தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்கரகளிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான்.மஞ்சளழகி அவனிடம் காதல் வயபடுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.
பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைகரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் . ஸ்ரீவிஜயத்தை கைப்பற்றி சோழ புலிக்கொடியை பறக்கவிடுகிறான் . போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்தனர். அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசிரியரின் ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.

Eriyum Panikkadu Book - எரியும் பனிக்காடு

Eriyum Panikkadu. Rs.150. Buy Eriyum Panikkadu Books, எரியும் பனிக்காடு. Author - P.H.Daniel, Publisher - Vidiyal. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.comhttp://www.myangadi.com/eriyum-pannikkadu-vidiyal

Book Description:

ஆனைமலைக் காடுகளில் தழைந்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்
...நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்....
- ஆதவன் தீட்சண்யா

உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 'ரெட் டீ' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து முதல் முதலாக 'எரியும் பனிக்காடக'த் தமிழுக்கு வருகிறது.

இன்றைய எழில்மிகுந்த மலை நகரங்களையும், அன்னியச் செலாவணியை அள்ளித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங்கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்த கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான் 'எரியும் பனிக்காடு'.

தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது 'எரியும் பனிக்காடு'.

பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நவீனமாக உருப்பெற்றன.

இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை   முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.

இலக்கியத் தளத்தில் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் இடையிலான கற்பனையான லக்ஷ்மன் ரேகைகள் மறைந்து, இரண்டும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இருக்கிறது 'எரியும் பனிக்காடாக' வெளிவரும் 'ரெட் டீ'.

தமிழில் உர்ய்ப்பெற்று வரும் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் 'ரெட் டீ' ஓர் உன்னதமான தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்ளும் போது தமிழிலக்கியத்தின் எல்லைகள் விரிந்து பரவும்.