Saturday, June 15, 2013

Sivakamiyin Sabatham - சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sapatham. Rs.300.  Buy Sivakamiyin Sapatham Book, Author - Kalki. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.com, http://www.myangadi.com/sivakamiyin-sapatham-vanathi-pathipagam

Book Description

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம், சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள் என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள் என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.

மகேந்திர வர்ம பல்லவர், அவர் புதல்வர் நரசிம்ம வர்ம பல்லவர் எனும் மாமல்லர் அவர்களுக்கு முந்தைய தலைமுறையால் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மல்லை எனும் மாமல்லபுரத்தின் பின்னணியோடு நான்கு தலைமுறையினரை ஒட்டி பின்னிப் பிணையப்பட்ட அற்புதமான சரித்திர நவீனம் 'சிவகாமியின் சபதம்'.

No comments:

Post a Comment